
சென்னை: சென்னை, புறநகர் மாவட்டங்களில் நேற்று அதிகாலை விடிய விடிய கனமழை கொட்டித் தீர்த்தது. சென்னை, புறநகர் மாவட்டங்களில் கடந்த ஒரு மாதமாக விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. கடந்த ஆக. 30-ம் தேதி நள்ளிரவில் பெய்த அதிகனமழையால், 27 விமான சேவைகள் பாதிக்கப்பட்டன.
அதிகபட்சமாக வட சென்னையில் மணலியில் 27 செமீ, மணலி புதுநகரில் 26 செமீ, விம்கோ நகரில் 23 செமீ மழை பதிவாகியுள்ளது. இந்த அதிகனமழை மேகவெடிப்பால் நிகழ்ந்ததாக வானிலை ஆய்வு மையம் முதன் முறையாக அறிவித்தது.