
ஹைதராபாத்: ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு பிறகு இந்தியா-பாகிஸ்தான் மோதல் எந்தவொரு மூன்றாம் தரப்பு தலையீட்டாலும் நிறுத்தப்படவில்லை என்று பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறினார்.
ஹைதராபாத்தில் உள்ள பரேட் மைதானத்தில் இன்று மத்திய அரசு ஏற்பாடு செய்த 'ஹைதராபாத் விடுதலை தின' கொண்டாட்டங்களில் கலந்துகொண்டு பேசிய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், “பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் இந்தியாவின் சமூக நல்லிணக்கத்தின் மீது நடத்தப்பட தாக்குதலாகும். எதிர்காலத்தில் இதுபோல ஏதேனும் பயங்கரவாதத் தாக்குதல்கள் நடந்தால் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை மீண்டும் தொடங்கும்.