
சென்னை: கைலாஷ் யாத்திரை ரத்தானதால் பாதிக்கப்பட்டவருக்கு ரூ.75 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் என சுற்றுலா நிறுவனத்துக்கு, நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
புதுச்சேரியை சேர்ந்த ஓய்வு பெற்ற மத்திய அரசு அதிகாரி ராமநாதன், நுகர்வோர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: நானும் என் மனைவியும், கைலாஷ் மானசரோவர் யாத்திரை செல்வதற்காக, கடந்த 2023-ம் ஆண்டு கோயம்பேட்டில் செயல்பட்டு வரும் சுற்றுலா நிறுவனத்திடம் ரூ.20 ஆயிரம் செலுத்தி முன்பதிவு செய்தோம். மத்திய அரசு அனுமதியளிக்காததால் யாத்திரை ரத்து செய்யப்பட்டது.