
நாகர்கோவில்: தடை செய்யப்பட்ட அமைப்புகளுடன் நாகர்கோவில் இளைஞருக்கு தொடர்பு இருப்பதாக கிடைத்த தகவலின்பேரில், அவரது பெற்றோரிடம் என்ஐஏ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் தடை செய்யப்பட்ட அமைப்புக்கு ஆதரவாக செயல்பட்டதாக சிலரை என்ஐஏ (தேசிய புலனாய்வு முகமை) அதிகாரிகள் சில நாட்களுக்கு முன்பு கைது செய்தனர்.
இவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டறிய அவர்களது செல்போன்கள் ஆய்வு செய்யப்பட்டன. அப்போது, கைதான ஒருவருடன் நாகர்கோவில் வட்டவிளையைச் சேர்ந்த ரஷித் அகமது என்பவரின் மகன் ஹூசன் உசைன் (28) என்பவர் சமூக வலைதளம் மூலம் தொடர்பில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.