
சென்னை: ‘இந்து தமிழ் திசை’ நாளிதழின் 13-வது ஆண்டு தொடக்கத்தையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
முதல்வர் மு.க.ஸ்டாலின்: தமிழ்ப் பத்திரிகையுலகில் புதுப்போக்கை உருவாக்கிடும் வகையில் பாரம்பரியம் மிக்க ‘தி இந்து’ குழுமத்தால் தொடங்கப்பட்ட ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் 12 ஆண்டுகளை நிறைவு செய்து, 13-வது ஆண்டில் அடியெடுத்து வைப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.