• September 17, 2025
  • NewsEditor
  • 0

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் இயற்கை பேரிட​ரால் சேத​மான சாலைகள் விரைந்து சீரமைக்​கப்​ப​டாத கராணத்​தால் போக்​கு​வரத்து முடங்​கி​யுள்​ளது. இதனால், ஆயிரக்​கணக்​கான டன் ஆப்​பிள்​கள் குறித்த நேரத்​துக்கு அனுப்ப முடி​யாமல் தேக்​கமடைந்து அழுகி வரு​வது விவ​சா​யிகளை​யும், வர்த்​தகர்​களை​யும் வேதனை அடைய செய்​துள்​ளது.

கடந்த மாதம் கனமழை மற்​றும் மேகவெடிப்பு காரண​மாக ஸ்ரீநகர்​-ஜம்மு தேசிய நெடுஞ்​சாலை கடுமை​யாக சேதமடைந்​துள்​ளது. ஏறக்​குறைய 300 மீட்​டர் நீளத்​துக்கு சாலைகள் வெள்​ளத்​தால் அடித்​துச் செல்​லப்​பட்டு காணா​மல் போ​யுள்​ளது. மேலும் ஆங்​காங்கே பெரிய பனிப்​பாறை சரிவு​களும் ஏற்​பட்​டுள்​ளது. குறிப்​பாக செனானி-உதம்​பூர், நஷ்ரி-பனிஹால் நெடுஞ்​சாலைகளில் பாதிப்பு அதி​க​மாக காணப்​படு​கிறது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *