
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் இயற்கை பேரிடரால் சேதமான சாலைகள் விரைந்து சீரமைக்கப்படாத கராணத்தால் போக்குவரத்து முடங்கியுள்ளது. இதனால், ஆயிரக்கணக்கான டன் ஆப்பிள்கள் குறித்த நேரத்துக்கு அனுப்ப முடியாமல் தேக்கமடைந்து அழுகி வருவது விவசாயிகளையும், வர்த்தகர்களையும் வேதனை அடைய செய்துள்ளது.
கடந்த மாதம் கனமழை மற்றும் மேகவெடிப்பு காரணமாக ஸ்ரீநகர்-ஜம்மு தேசிய நெடுஞ்சாலை கடுமையாக சேதமடைந்துள்ளது. ஏறக்குறைய 300 மீட்டர் நீளத்துக்கு சாலைகள் வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போயுள்ளது. மேலும் ஆங்காங்கே பெரிய பனிப்பாறை சரிவுகளும் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக செனானி-உதம்பூர், நஷ்ரி-பனிஹால் நெடுஞ்சாலைகளில் பாதிப்பு அதிகமாக காணப்படுகிறது.