• September 17, 2025
  • NewsEditor
  • 0

புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடிக்கு தொலைபேசி அழைப்பு மூலம் பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளார் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப். இந்த சூழலில் அவரை தன் நண்பர் என குறிப்பிட்டு பிரதமர் மோடி நன்றி கூறியுள்ளார்.

கடந்த ஜூன் 17-ம் தேதிக்கு பின்னர் இருநாட்டு தலைவர்களும் தொலைபேசியில் பேசிக் கொள்வது இதுவே முதல் முறை என தகவல். இந்தியாவுக்கு அமெரிக்கா விதித்துள்ள 50% வரி விதிப்பு நடவடிக்கை இருநாட்டு உறவில் சற்று விரிசலை ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது. இதில் ரஷ்யாவிடம் இருந்து இந்தியா தொடர்ந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்து வருகின்ற காரணத்தால் கூடுதலாக 25% வரியை அமெரிக்கா விதித்துள்ளது. இந்த நிலையில்தான் பிரதமர் மோடி மற்றும் ட்ரம்ப் தொலைபேசியில் பேசியுள்ளனர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *