
புதுச்சேரி: புதுச்சேரி நகர பகுதியில் உள்ள தனியார் வங்கியில் அதிகாலையில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் பணம் எண்ணும் இயந்திரம், டேபிள்-சேர், ஏசி மெஷின் எரிந்து சாம்பலானது.
புதுவை நகரின் மையப் பகுதியான புஸ்சி வீதி – எல்லையம்மன் கோவில் வீதி சந்திப்பில் சிட்டி யூனியன் வங்கி உள்ளது. இந்த வங்கியை வழக்கம் போல் பணி முடிந்து ஊழியர்கள் நேற்று பூட்டி சென்றனர். இந்த நிலையில் இன்று அதிகாலை வங்கியின் உள்ளே இருந்து புகை வந்தது. இதனை பார்த்த வங்கி நுழைவு வாயிலில் பாதுகாப்பு பணியில் இருந்த இரவு காவலாளி உடனடியாக 100க்கு போன் செய்து தகவல் தெரிவித்தார்.