
சென்னை: “அன்புமணி தரப்பை தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது என காட்டப்பட்ட கடிதம் என்பது திட்டமிட்ட மோசடி ஆகும். ஏன் முகவரியை மாற்ற வேண்டும்? பாமக நிறுவனர், தலைவர் எல்லாமே ராமதாஸ்தான்” என்று பாமக கவுரவத் தலைவர் ஜி.கே.மணி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் இன்று கூறியது, “பாமகவை யார் தொடங்கினார்கள். கட்சிக்கு யார் அங்கீகாரம் பெற்று கொடுத்தார்கள் என்பதெல்லாம் மக்களுக்கு தெரியும். இப்போது கட்சிக்கு யார் வேண்டுமென்றாலும் உரிமை கொண்டாடலாம். பாமகவுடன் பயணிக்க வேண்டும் என நினைப்பவர்கள் ராமதாஸுடம் இணைந்து பயணிப்பதுதான் நல்லது.