• September 16, 2025
  • NewsEditor
  • 0

அதிமுகவில் 2016-இல் ஜெயலலிதா இறந்தவுடன் வெடித்த மோதல்கள் இன்னும் ஓயவில்லை. அடித்துப் பிடித்து ஒருவழியாக பொதுச் செயலாளர் பதவியில் அமர்ந்தாலும், எடப்பாடி பழனிசாமிக்கு இன்னும் முழுமையாக ரூட் கிளியராகவில்லை. தேர்தல் நெருங்கும் சூழலில், இபிஎஸ்சை செங்கோட்டையன், ஓபிஎஸ், தினகரன், சசிகலா என பலமுனைகளில் இருந்தும் சுற்றி வளைத்திருக்கிறார்கள். அதிமுகவின் அடுத்த கட்ட நகர்வுகள் எப்படி இருக்கும்?

2026 சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி கொண்டிருக்கிறது. ஆட்சியை மீண்டும் பிடித்துவிடுவோம் என்று உறுதியோடு நிற்கிறது திமுக. ஆனால், பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவில் இடியாப்ப சிக்கல் இன்னும் தீரவில்லை. மிஞ்சியும், கெஞ்சியும் பார்த்தும் மீண்டும் அதிமுகவில் அடைக்கலம் கிடைக்காத விரக்தியோடு, பாஜகவும் பாதகம் செய்துவிட்ட வருத்தத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறினார் ஓபிஎஸ். அதேபோல, எங்களுக்கு துரோகம் செய்த இபிஎஸ் இருக்கும் பக்கம் தப்பித் தவறியும் இருக்க மாட்டோம் என சபதம் போட்டு கூட்டணியிலிருந்து வெளியேறிவிட்டார் டிடிவி தினகரன்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *