
திருச்சி: மதிமுக தவிர்க்க முடியாத சக்தி என்பதை நிரூபித்து அங்கீகாரம் பெறுவோம் என அக்கட்சியின் முதன்மைச் செயலாளர் துரை வைகோ எம்.பி. தெரிவித்தார். அண்ணாவின் 117-வது பிறந்தநாளையொட்டி திருச்சி சிறுகனூரில் மதிமுக மாநில மாநாடு நேற்று நடைபெற்றது. மதிமுக ஆட்சிமன்றக் குழுச் செயலாளர் சி.கிருஷ்ணன் தலைமை வகித்தார்.
திருச்சி புறநகர் வடக்கு மாவட்டச் செயலாளர் டி.டி.சி.சேரன் வரவேற்றார். மாநில துணைப் பொதுச் செயலாளர் டாக்டர் ரொஹையா ஷேக் முகமது கட்சிக் கொடியேற்றி வைத்தார். எம்எல்ஏ சின்னப்பா, அண்ணா சுடர் ஏற்றி வைத்தார்.