
மானாமதுரை: மானாமதுரையில் மருத்துவக் கழிவு சுத்திகரிப்பு ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்து முற்றுகையிட முயன்றோரை போலீஸார் தடுத்ததால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. தொடர் கடையடைப்பு, அடுத்தடுத்த மறியலால் ஆலையை நிரந்தரமாக மூட அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டது.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை சிப்காட்டில் மருத்துவக் கழிவு சுத்திகரிப்பு ஆலை அமைக்க கடந்த ஆண்டு பிப்.21-ம் தேதி கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்தப்பட்டது. இதற்கு மானாமதுரை மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆலைக்கு எதிராக சூரக்குளம் – பில்லறுத்தான், செய்களத்தூர் ஆகிய 2 ஊராட்சிகளில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டங்களில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டன.