
லக்னோ: உத்தர பிரதேச மாநிலத்தில் கடந்த 2016-ம் ஆண்டு 403 எக்ஸ்ரே டெக்னீஷியன்கள் தேர்வு செய்யப்பட்ட னர். அப்போது உ.பி.யில் அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாதி அரசு பொறுப்பில் இருந்தது.
எக்ஸ்ரே டெக்னீஷியன்களில் ஆக்ராவை சேர்ந்த அர்பித் சிங் என்பவரும் ஒருவர். நியமன பட்டியலில் 80-வது இடத்தில் அவர் இடம்பெற்றிருந்தார். அதன்பிறகு சில நாட்களில் ‘அர்பித்’ என்ற பெயரில் 6 பேர் மற்ற மாவட்டங்களில் உள்ள சுகாதார மையங்களில் எக்ஸ்ரே டெக்னீஷியன்களாகப் பணியில் சேர்ந்துள்ளனர்.