
புதுடெல்லி: பிஹாரில் மேற்கொள்ளப்பட்டு வரும் வாக்காளர் சிறப்புத் திருத்த நடவடிக்கையை எதிர்த்து ஜனநாயக சீர்த்திருத்த சங்கம்(ஏடிஆர்) உள்ளிட்ட அமைப்புகளின் மனுக்களை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சூரியகாந்த், ஜோய்மால்ய பக் ஷி அமர்வு விசாரித்து வருகிறது.
இந்நிலையில் நேற்று நடைபெற்ற விசாரணையின்போது நீதிபதிகள் கூறியதாவது: பிஹாரில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு எதிரான மனுக்களை விசாரித்து அளிக்கும் தீர்ப்பு நாடு முழுவதற்கும் பொருந்தும்.