• September 16, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: தவெக தலை​வர் விஜய் தமிழகம் முழு​வதும் சுற்​றுப்​பயணம் மேற்​கொண்டு மக்​களை சந்​தித்து வரு​கிறார். கடந்த 13-ம் தேதி திருச்​சி​யில் தனது சுற்​றுப்​பயணத்தை தொடங்​கிய விஜய், அன்​றைய தினம் திருச்​சி, அரியலூர், பெரம்​பலூர் ஆகிய 3 மாவட்​டங்​களில் சுற்​றுப்​பயணம் செய்ய திட்​ட​மிட்​டிருந்​தார். ஆனால், வழியெங்​கும் அதி​கள​வில் தொண்​டர்​கள் திரண்​ட​தால், குறிப்​பிட்ட நேரத்​துக்​குள் அனு​மதி வழங்​கப்​பட்ட இடங்​களுக்கு விஜய்​யால் செல்ல முடிய​வில்​லை.

இதனால், திருச்​சி, அரியலூரில் மட்​டும் மக்​கள் சந்​திப்பை நடத்​தி​விட்​டு, பெரம்​பலூர் செல்​லாமல், விஜய் சென்னை திரும்​பி​னார். இந்​நிலை​யில், சென்​னை​யில் விஜய் 2 நாட்​கள் சுற்​றுப்​பயணம் மேற்​கொள்ள இருக்​கிறார். இதற்​காக, சென்னை மாவட்ட செய​லா​ளர் அப்​புனு தலை​மை​யில் தவெக நிர்​வாகி​கள் காவல் ஆணை​யர் அருணிடம் அனு​மதி கோரி நேற்று மனு அளித்​தனர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *