
காஞ்சிபுரம்: மதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட மல்லை சத்யா தலைமையில் புதிய அமைப்பு தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. புதிய கொடி மட்டும் தற்போது அறிமுகம் செய்யப்பட்ட நிலையில் நவ. 20-ம் தேதி பெயர் அறிவிக்கப்பட உள்ளது.
காஞ்சிபுரத்தில் அறிஞர் அண்ணாவின் 117-வது பிறந்த நாள் முப்பெரும் விழா நேற்று நடைபெற்றது. இந்த விழாவுக்கு கராத்தே எம்.பழனிசாமி தலைமை தாங்கினார். இதில் மதிமுகவில் இருந்து வெளியேறிய நிர்வாகிகள் மல்லை சத்யா, திருப்பூர் துரைசாமி, நாஞ்சில் சம்பத் உட்பட செவ்வந்தியப்பன், வல்லம் பஷீர், வாசுகி பெரியார்தாசன் என முக்கிய நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.