
சென்னை: பிரபல ஜவுளி நிறுவனத்தில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.31 கோடி ரொக்கம், தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூரில் சிறிய ஜவுளி கடையாக தொடங்கப்பட்டு, தற்போது தமிழகத்தின் முக்கிய நகரங்கள் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களிலும் கிளைகளைத் தொடங்கி, ஜவுளி, நகை வியாபாரங்களை பிரபல ஜவுளி நிறுவனம் செய்து வருகிறது. இந்நிலையில், தமிழகம் முழுவதும் அந்நிறுவனத்துக்கு சொந்தமான இடங்களில் கடந்த 12-ம் தேதி வருமான வரி துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.