
திருச்சி: கட்சியின் கட்டமைப்பை மேலும் வலுப்படுத்த திமுகவுடன் அனுசரணையாக செயல்படுங்கள் என மதிமுக மாநில மாநாட்டில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ தொண்டர்களுக்கு அறிவுறுத்தினார்.
அண்ணாவின் 117-வது பிறந்த நாளையொட்டி திருச்சி சிறுகனூரில் மதிமுக மாநில மாநாடு நேற்று நடைபெற்றது. மதிமுக ஆட்சிமன்றக் குழுச் செயலாளர் சி.கிருஷ்ணன் தலைமை வகித்தார். மாநில துணைப் பொதுச்செயலாளர் டாக்டர் ரொஹையா ஷேக் முகமது கட்சிக் கொடியேற்றி வைத்தார்.