
ஜம்மு: ஆயுதங்களை கடத்தியதாக ராணுவத்தைச் சேர்ந்த 3 சுமைதூக்கும் நபர்களை ஜம்மு-காஷ்மீர் போலீஸார் கைது செய்துள்ளனர். ராணுவ வீரர்களுக்கு உதவுவதற்காக மாத சம்பள அடிப்படையில் சுமை தூக்கும் நபர்களை ராணுவ அதிகாரிகள் தற்காலிகமாக பணியமர்த்தி வருகின்றனர்.
இந்த சுமை தூக்கும் நபர்கள் சிக்கலான மலைப்பாதை, பனிமலைகளில் ராணுவ வீரர்களுக்கு உதவியாக இருப்பர். ராணுவ வீரர்களுக்குத் தேவையான பொருட்களை மலைப்பகுதிகள் உள்ளிட்ட இடங்களுக்கு சுமந்து சென்று உதவி செய்வர்.