
புதுடெல்லி: வளர்ச்சி அடைந்த இந்தியாவை உருவாக்க செயற்கை நுண்ணறிவின் பங்கு என்ற தலைப்பில் நிதி ஆயோக் சார்பில் டெல்லியில் நேற்று சிறப்பு ஆய்வறிக்கை வெளியிடப்பட்டது.
இதில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், மின்னணு தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், நிதி ஆயோக் தலைமைச் செயல் அதிகாரி சுப்பிரமணியம் ஆகியோர் பங்கேற்றனர்.