
ஈரோடு: அதிமுக ஒன்றிணைய வேண்டும் என்ற எனது கருத்துக்கு தொண்டர்கள், பொதுமக்களிடையே வரவேற்பு கிடைத்துள்ளது. இதை புரிய வேண்டியவர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
முன்னாள் அமைச்சரும், கோபி தொகுதி அதிமுக எம்எல்ஏவுமான செங்கோட்டையன், கடந்த 5-ம் தேதி, செய்தியாளர்களிடம் பேசும்போது,; ‘அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்களை ஒன்றிணைக்கும் முயற்சியை 10 நாட்களில் தொடங்க வேண்டும். இதைச் செய்யத் தவறினால், இதே மனநிலையில் இருப்பவர்களை சேர்த்து ஒருங்கிணைக்கும் பணியை நாங்களே மேற்கொள்வோம்’ என தெரிவித்தார்.