
சென்னை: பாமகவின் தலைவராக அன்புமணியே தொடர்வார் என தேர்தல் ஆணையம் அங்கீகரித்து கடிதம் வழங்கியுள்ளது. மாம்பழம் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. வேட்பாளர்களின் ஏ மற்றும் பி பார்மில் கையெழுத்திடும் அதிகாரம் அன்புமணிக்கு வழங்கப்பட்டுள்ளது என்று கட்சியின் செய்தித்தொடர்பாளர் வழக்கறிஞர் பாலு தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக கட்சியின் செய்தித் தொடர்பாளர் வழக்கறிஞர் பாலு சென்னையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: பாமக தலைவர் அன்புமணி தலைமையில் கடந்த ஆகஸ்ட் 9-ம் தேதி மாமல்லபுரத்தில் நடைபெற்ற பொதுக்குழுவை அங்கீகரித்து இந்திய தேர்தல் ஆணையம் கடிதம் வழங்கியுள்ளது.