
சென்னை: சுகாதாரத் துறையில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை செயல்படுத்துவதற்காக குழு அமைக்கப்பட்டுள்ளதாக துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
சென்னையில் நேற்று பொது சுகாதாரத் துறையில் புதிய பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணைகளை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வழங்கினார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் (எம்ஆர்பி) மூலம் தேர்வு செய்யப்பட்ட உணவு பாதுகாப்புத் துறையில் முதுநிலை பகுப்பாய்வாளர் 15, ஆய்வக தொழில்நுட்புநர் நிலை-2-க்கு 3 என மொத்தம் 18 பேருக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன.