• September 16, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: ஓரணி​யில் தமிழ்​நாடு முன்​னெடுப்​பின் ஒரு பகு​தி​யாக, அண்ணா பிறந்த நாளான நேற்​று, திமுக சார்​பில் 68 ஆயிரத்​துக்​கும் மேற்​பட்ட வாக்​குச்​சாவடிக்​குட்​பட்ட பகு​தி​களில், ‘தமிழகத்தை தலைகுனிய விட​மாட்​டோம்’ என்ற உறு​தி​மொழி ஏற்பு நிகழ்ச்சி நடை​பெற்​றது.

ஓரணி​யில் தமிழ்​நாடு இயக்​கம், ஒரு கோடிக்​கும் மேற்​பட்ட குடும்​பங்​களை இணைத்​துள்​ளது. இதன் முதற்​கட்​டம் ஜூலை 1 முதல் 70 நாட்​களுக்​கும் மேல் நடை​பெற்​று, திமுக​வின் 7 லட்​சம் தொண்​டர்​கள் மூலம் 68,000 வாக்​குச்​சாவடிகளில் உள்ள குடும்​பங்​களைச் சந்​தித்​தனர். இந்​நிலை​யில், மாநிலம் முழு​வது​முள்ள 68 ஆயிரத்​துக்​கும் அதி​க​மான வாக்​குச்​சாவடிகளில் அந்​தந்த வாக்​குச்​சாவடிக்​குட்​பட்ட பகு​தி​யில் ஓரணி​யில் தமிழ்​நாடு முன்​னெடுப்பு மூலம் இணைந்​தவர்​களை ஒன்​று​திரட்​டி, உறு​தி​ மொழியேற்​கச் செய்ய முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் அறி​வுறுத்​தி​யிருந்​தார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *