
குன்னூர்: குன்னூரில் அண்ணா பிறந்தநாள் விழாவையொட்டி திமுகவினர் மாலை அணிவித்து உறுதிமொழி எடுக்கும்போது, அதிமுக பொதுக் கூட்டத்தில் திமுகவை விமர்சனம் செய்ததால், ஒலிபெருக்கியை நிறுத்த கோரி திடீரென்று திமுகவினர் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
அண்ணாவின் 117-ம் பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டது. இதனையொட்டி நீலகிரி மாவட்டம் குன்னூரில் அண்ணா சிலைக்கு அதிமுகவினர் ஊர்வலமாக வந்து மாலை அணிவித்தனர். பின்னர் அருகில் ஏற்பாடு செய்யப்பட்ட பொதுக் கூட்டத்தில் கலந்துகொண்டனர். சிறிது நேரத்தில் திமுகவினர் ஊர்வலமாக வந்து அண்ணா சிலைக்கு மாலை அணிவிக்க காத்திருந்தனர்.