
திருவனந்தபுரம்: கேரளாவை அச்சுறுத்தும் ஆபத்தான மூளையை தின்னும் அமீபா நோய் எனப்படும் அமீபிக் மெனிங்கோஎன்செபாலிடிஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 67 ஆக உயர்ந்துள்ளது. இப்போது திருவனந்தபுரத்தில் 17 வயது சிறுவனுக்கு இந்த தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
திருவனந்தபுரத்தை சேர்ந்த சிறுவனுக்கு மூளையை தின்னும் அமீபா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதால், சுகாதாரத் துறை அக்குளம் எனும் சுற்றுலா கிராமத்தில் உள்ள நீச்சல் குளத்தை மூடினர். மேலும், அந்த நீச்சல் குளத்திலிருந்து சோதனைக்காக நீர் மாதிரிகளை சேகரித்தனர். அந்தச் சிறுவன் முந்தைய நாள் நண்பர்களுடன் நீச்சல் குளத்தில் குளித்ததாக அதிகாரிகள் குறிப்பிட்டனர்.