
திண்டுக்கல்லுக்கும் அதிமுக-வுக்கும் பிரிக்கமுடியாத பிணைப்பு உண்டு. ஏனென்றால், 1972-ல் திண்டுக்கல் மக்களவைத் தொகுதிக்கான இடைத் தேர்தலில் தான் அதிமுக-வின் முதல் வேட்பாளரான மாயத்தேவரை நிறுத்தி சுமார் 1.45 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் ஜெயிக்கவைத்துக் காட்டினார் எம்ஜிஆர்.
அந்தத் தேர்தலில் சுயேச்சைகளுக்காக ஒதுக்கப்பட்ட சின்னமான இரட்டை இலை மாயத்தேவருக்கும் ஒதுக்கப்பட்டு, அது தனது முதல் தேர்தலிலேயே வெற்றிக் கணக்கை தொடங்கியதும் திண்டுக்கல்லில் தான். அதிமுக-வுக்கும் திண்டுக்கல்லுக்கும் இப்படியொரு பந்தம் இருப்பதாலோ என்னவோ, திண்டுக்கல் சட்டமன்றத் தொகுதியில் திமுக-வால் ஜொலிக்க முடியவில்லை.