• September 15, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: ​திமுக​வில் அமைப்பு ரீதி​யாக செயல்​படும் சென்னை தென்​மேற்கு மாவட்​டத்​தின் தியாக​ராய நகர், மயி​லாப்​பூர் மற்றும் வடகிழக்கு மாவட்​டத்​தின் திரு​வெற்​றியூர் சட்​டப்​பேர​வைத் தொகு​தி​களுக்கு உட்​பட்டு பகு​தி, வட்டம், பாகம் அளவில் நியமிக்​கப்​பட்ட புதிய நிர்​வாகி​களின் அறி​முகக் கூட்​டம், திமுக தலை​மையகத்​தில் துணை முதல்​வரும் திமுக இளைஞரணி செயலா​ளரு​மான உதயநிதி ஸ்டா​லின் தலை​மை​யில் நேற்று நடை​பெற்​றது.

கூட்​டத்​துக்கு இளைஞரணி துணைச் செய​லா​ளர் தூத்​துக்​குடி எஸ்​.ஜோயல் முன்​னிலை வகித்​தார். கூட்​டத்​தில் உதயநிதி பேசி​ய​தாவது: இங்கு வந்​துள்​ளவர்​கள் எல்​லாம் என்​னைப் பார்க்க வந்த கூட்​ட​மில்​லை. என்​னுடன் செய​லாற்ற வந்த கூட்​டம்; கொள்​கைக் கூட்​டம். இந்​தி​யா​விலே முதன்​முதலாக ஓர் அரசி​யல் கட்​சி​யில் இளைஞரணி உரு​வாக்​கப்​பட்​டது என்​றால், அது திமுக​வில்​தான். புதி​ய நிர்​வாகி​கள் எல்​லாம் சிபாரிசு இல்​லாமல், முழுவதும் தகுதி அடிப்​படை​யில் பல்​வேறு கட்ட நேர்​காணல், ஆலோ​சனைக்கு பிறகே நியமிக்​கப்​பட்டுள்​ளனர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *