
மும்பை: மகாராஷ்டிர ஆளுநராக ஆச்சார்ய தேவ்விரத் இன்று பதவி ஏற்றுக்கொண்டார்.
மகாராஷ்டிரா ஆளுநராக இருந்து வந்த தமிழகத்தைச் சேர்ந்த சி.பி. ராதாகிருஷ்ணன், குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்றதை அடுத்து ஆளுநர் பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து, குஜராத் ஆளுநர் ஆச்சார்ய தேவ்விரத்துக்கு மகாராஷ்டிராவின் ஆளுநராக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டது. இதற்கான உத்தரவை குடியரசு தலைவர் திரவுபதி முர்மு பிறப்பித்திருந்தார்.