
புதுக்கோட்டை: பள்ளி மாணவர்களை வரவழைத்து பிரச்சாரத்தில் கூட்டத்தைக் காண்பிக்கும் பரிதாபமான நிலை தவெக தலைவர் விஜய்க்கு ஏற்பட்டுள்ளது என தமிழக இயற்கை வளங்கள் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி தெரிவித்தார்.
புதுக்கோட்டை மாலையீடு பகுதியில் திமுக தெற்கு மாவட்டச் செயற்குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில், அமைச்சர்கள் எஸ்.ரகுபதி, பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன், வடக்கு மாவட்டச் செயலாளர் கே.கே.செல்லபாண்டியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.