
சென்னை: ரயில்களின் மீது கல் எறிபவர்களுக்கு ரயில்வே சட்டத்தின் கீழ் ஆயுள் சிறைத் தண்டனை அல்லது 10 ஆண்டு சிறைத் தண்டனை கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
தெற்கு ரயில்வேயில் பல்வேறு வழித்தடங்களில் விரைவு, பாசஞ்சர் ரயில் மற்றும் மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன. சில
ரயில்களின் மீது கற்களை வீசும் சம்பவங்கள் அவ்வப்போது நடைபெறுகின்றன. கற்களை வீசுபவர்கள் மீது ரயில்வே சட்டத்தின் கீழ், ஆர்பிஎஃப் போலீஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.