• September 15, 2025
  • NewsEditor
  • 0

ஜம்மு: ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதி களுக்கு உள்ளூர் மக்கள் ஆதரவு அளிப்பது ஒழிக்கப்பட்டுள்ளதால், தீவிரவாதிகள் பதுங்கு குழிகளில் தங்குகின்றனர் என ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஜம்மு காஷ்மீரின் குல்​காம் மாவட்ட மலைப் பகு​தி​யில் கடந்த வாரம் நடந்த என்​க​வுன்​டரில் 2 தீவிர​வா​தி​கள் கொல்​லப்​பட்​டனர். அப்​பகு​தி​யில் நடத்​தப்​பட்ட தேடு​தல் வேட்​டை​யில் ஒரு பதுங்கு குழி கண்​டு​பிடிக்​கப்​பட்​டது. அதில் உணவுப் பொருட்​கள், சிறிய கேஸ் அடுப்​பு, குக்​கர், ஆயுதங்​கள் மற்​றும் வெடிமருந்து பொருட்​கள் இருந்​தன.

இது குறித்து ராணுவ அதி​காரி ஒரு​வர் அளித்த பேட்​டி​யில் கூறிய​தாவது: தீவிர​வா​தி​கள் முன்பு உள்​ளூர் மக்​கள் ஆதர​வுடன் அவர்​கள் வீட்​டில் பதுங்​கி​யிருந்​தனர். தீவிர​வா​தி​களுக்கு ஆதரவு அளிப்​போர் மீது கடும் நடவடிக்கை எடுக்​கப்​பட்​ட​தால், தற்​போது தீவிர​வா​தி​களுக்கு யாரும் ஆதரவு அளிப்​ப​தில்​லை.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *