
கிணத்துக்கடவு: பொள்ளாச்சி கிணத்துக்கடவை சேர்ந்த பெண்ணின் மகளிர் உரிமைத்தொகை, உத்தர பிரதேசத்தில் வசிக்கும் பெண்ணின் வங்கிக் கணக்குக்கு 2 ஆண்டுகளாக அனுப்பப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. கோவை மாவட்டம் கிணத்துக்கடவு கொண்டம்பட்டியைச் சேர்ந்தவர் மகேஸ்வரி (50). இவர் 2 ஆண்டுகளுக்கு முன்பு தமிழக அரசின் மகளிர் உரிமைத்தொகை பெற விண்ணப்பித்தார். விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்டதற்கான எந்த குறுஞ்செய்தியும் வராததால், விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதாக கருதியுள்ளார்.
இந்நிலையில், கிணத்துக்கடவு ஒன்றியத்தில் ஜூலை 25-ம் தேதி நடந்த ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் மீண்டும் மகளிர் உரிமைத்தொகை கோரி விண்ணப்பித்துள்ளார். மனுவை ஆய்வு செய்த அதிகாரிகள், “உங்களுக்கு 2 ஆண்டுகளாக மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படுகிறது. வங்கிக் கணக்கை சரிபாருங்கள்” எனக் கூறினர்.