
தாரங்: சுதேசி பொருட்களை மட்டுமே வாங்க வேண்டும். ஒவ்வொரு கடையிலும் சுதேசி பொருட்களை மட்டுமே விற்பனை செய்ய வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவுறுத்தி உள்ளார்.
மிசோரம், மணிப்பூர், அசாம் மாநிலங்களில் பல்வேறு அரசு நலத்திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி நேற்று முன்தினம் தொடங்கிவைத்தார். அன்றைய தினம் இரவு அசாமின் குவாஹாட்டி நகரில் அவர் தங்கினார்.