
சென்னை: தமிழகத்தில் யாரும் தவிர்க்க முடியாத மாபெரும் இயக்கம் தேமுதிக என்று நம் உழைப்பால் உணர்த்துவோம் என பிரேமலதா தெரிவித்துள்ளார்.
21-ம் ஆண்டு தொடக்கத்தையொட்டி தொண்டர்களுக்கு தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா எழுதிய கடிதம்: சாதி, மதத்துக்கு அப்பாற்பட்ட கட்சியாக ‘ஒரே குலம் ஒரே இனம்’ என்ற கோட்பாட்டோடு சனாதனம், சமதர்மம், சமத்துவத்தைக் கடைப்பிடிக்கும் கட்சியாக தேமுதிக என்றும் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.