• September 15, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: தமிழகத்​தில் நாளை முதல் வரும் 19-ம் தேதி வரை சில மாவட்​டங்​களில் கனமழை பெய்ய வாய்ப்​புள்​ள​தாக வானிலை ஆய்வு மையம் தெரி​வித்​துள்​ளது.

இதுதொடர்​பாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பில் கூறி​யிருப்​ப​தாவது: தெற்கு ஒடிசா கடலோரப் பகு​தி​களில் நில​விய காற்​றழுத்த தாழ்​வுப் பகு​தி, வடக்கு தெலங்​கானா மற்​றும் அதையொட்டிய விதர்பா பகு​தி​களில் நில​வியது. இது, மேற்​கு-வடமேற்கு திசை​யில் நகர்ந்​து, மத்​திய விதர்பா மற்​றும் அதையொட்​டிய பகு​தி​களை நோக்கி நகரக்​கூடும். தென்​னிந்​தி​யப் பகு​தி​களின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நில​வு​கிறது. இதன் காரண​மாக தமிழகத்​தில் இன்று (செப். 15) ஓரிரு இடங்​களி​லும், நாளை முதல் வரும் 19-ம் தேதி வரை சில இடங்​களி​லும் லேசானது முதல் மித​மான மழை பெய்​யக்​கூடும்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *