
அண்மையில் ‘உங்களுடன் ஸ்டாலின்’, ‘நலம் காக்கும் ஸ்டாலின்’, ‘தாயுமானவர் திட்டம்’, என அடுக்கடுக்காக பல திட்டங்களை அறிவித்து, தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. கடந்த சில மாதங்களாகவே நடைமுறையில் இருந்து வரும் ‘மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம்’ உள்ளிட்ட திட்டங்களும் புதிய இத்திட்டங்களுடன் தொடர்கின்றன.
இத்திட்டங்களில் குறிப்பாக, ‘உங்களுடன் ஸ்டாலின்’ மற்றும் சனிக்கிழமை தோறும் நடக்கும் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்டங்களுக்கு தற்போது கூடுதல் முக்கியத்துவம் அளிக்கப்பட்டு செயல்படுத்தப்படுகிறது. ஆனால் இத்திட்டங்களுக்கென தனி அலுவலர்கள் நியமிக்கப்படாமல் இருக்கின்ற அலுவலர்களையே வைத்து இந்த முகாம்கள் நடத்தப்படுகின்றன.