
விருதுநகர்: அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டம் தொடர்பாக தமிழக முதல்வர் நல்ல முடிவு எடுப்பார் என்று வருவாய்த்துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் கூறினார்.
இதுகுறித்து விருதுநகரில் இன்று அவர் அளித்த பேட்டியில், "ஓரணியில் தமிழ்நாடு என்ற திமுகவின் முன்னெடுப்பில் 1 கோடி குடும்பங்களுக்கு மேலானோர் இணைந்துள்ளனர். தமிழகத்தில் உள்ள 68 ஆயிரம் வாக்குச் சாவடிகளிலும் வாக்குச் சாவடி முகவர்கள் அப்பகுதியில் உள்ள ஒவ்வாரு வீட்டுக்கும் சென்று மக்களை இத்திட்டத்தில் இணைக்கும்போது, மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கிறோம்.