
புதுச்சேரி: "அரிக்கமேடுவை சுற்றுலாத்தலமாக மாற்றும் பணி வேகமாக நடக்க வாய்ப்பில்லை, ஏனெனில் புதுச்சேரி நிர்வாகம் அது மாதிரியுள்ளது, இதை சிரமப்பட்டு செய்கிறோம். கடந்த 2003ல் தொடங்கினோம் தற்போது 2025 ஆகிவிட்டது. எத்தனை ஆண்டுகள் ஆகிவிட்டன என்று பாருங்கள்" என்று முதல்வர் ரங்கசாமி வருத்தம் தெரிவித்துள்ளார்.
பெருங்கடல் வள மையம், மவுலானா அபுல் கலாம் ஆசாத் ஆசிய ஆய்வுகள் நிறுவனம் (MAKAIAS), இந்திய அரசின் கலாச்சார அமைச்சகம், புதுச்சேரி அரசின் கலை மற்றும் கலாச்சாரத் துறை, சுற்றுலாத் துறை, ஆகியவை இணைந்து "அரிக்கமேடு ஒரு பிந்தைய காலனித்துவ இந்தியப் பெருங்கடல் வரலாறு மற்றும் தொல்லியல்" என்ற தலைப்பில் ஒரு நாள் கருத்தரங்கை இன்று ஏற்பாடு செய்திருந்தனர்.