
திருச்சி: “தவெக தலைவர் விஜய் பிரச்சாரத்தில் முறையான திட்டமிடல் இல்லை. அரசு சொத்துகளை தவெகவினர் சேதப்படுத்தியுள்ளனர்” என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி சாடியுள்ளார்.
இது குறித்து அவர் இன்று செய்தியாளார்களிடம் கூறும்போது, “கடந்த நான்கரை ஆண்டு காலத்தில் திருச்சி மாவட்டத்துக்கு திமுக செய்துள்ள வளர்ச்சி திட்டங்களை விஜய் பார்க்கவில்லை போலும். திருச்சி மாவட்டத்துக்கு மட்டும் ரூ.30,000-ல் இருந்து ரூ.40,000 கோடிக்கு பல்வேறு திட்டங்களை திமுக அரசு செய்துள்ளது.