
விருதுநகர்: பட்டாசுக்கான தடையை நாடு முழுவதும் ஏன் நீட்டிக்கக் கூடாது? என்று மத்திய அரசிடம் உச்ச நீதின்றம் எழுப்பியுள்ள கேள்வியால் பட்டாசு உற்பத்தியார்கள் மற்றும் விற்பனையாளர்கள் கலக்கமடைந்துள்ளனர்.
தமிழகத்தில் 1,570 பட்டாசு ஆலைகள் இயங்கி வருகின்றன. விருதுநகர் மாவட்டத்தில் மட்டும் 1,101 ஆலைகள் உள்ளன. இத்தொழிலில் நேரடியாகவும் உபதொழில்கள் மூலம் மறைமுகமாகவும் விருதுநகர் மாவட்டத்தில் சுமார் 8 லட்சம் தொழிலாளர்கள் வேலைவாய்ப்பை பெற்று வருகின்றனர். பட்டாசு வெடிப்பதால் மாசு ஏற்படுவதாக உச்சநீதிமன்றத்தில் தனி நபர் வழக்குத் தொடரப்பட்டது.