• September 14, 2025
  • NewsEditor
  • 0

இந்த வாரத்தின் தொடக்கத்தில், நேபாளத்தில் ஜென் Z தலைமுறையினரின் போராட்டம் ஆரம்பமானது.

சமூக வலைதளத் தடை மற்றும் ஊழலுக்கு எதிராக தொடங்கிய இந்தப் போராட்டம், ஒரு கட்டத்தில் வன்முறையாக வெடித்தது.

வன்முறைக்கு பொறுப்பேற்று, கடந்த திங்கட்கிழமை (செப்டம்பர் 8), அந்த நாட்டின் உள்துறை அமைச்சர் ரமேஷ் லேகாக் பதவி விலகினார்.

அடுத்த நாளே, இந்தப் போராட்டத்தைக் கட்டுப்படுத்த முடியாமல், நேபாளத்தின் பிரதமர் கே.பி. ஷர்மா ஒலி பதவி விலகினார்.

சுசீலா கார்கி

சுசீலா கார்கி

நேபாளத்தின் இடைக்கால பிரதமராக மக்கள் மற்றும் ஜென் Z தலைமுறையினருக்கு இருந்த ஒரே சாய்ஸ், நேபாள உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி சுசீலா கார்கி.

இந்தப் பதவியை முதலில் மறுத்தாலும், நேற்று இரவு இடைக்கால பிரதமராக பொறுப்பேற்றுக்கொண்டார்.

இவர் ஊழலுக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்தவர்… ஊழல் வழக்குகளில் அமைச்சர் மற்றும் அதிகாரிகளுக்கு எதிராக நேர்மையாக தீர்ப்பு வழங்கியவர் – இதுதான் இவரை மக்கள் தேர்ந்தெடுத்தற்கான முக்கிய காரணம்.

தேர்தல் எப்போது?

நேபாளத்தின் அடுத்த நாடாளுமன்ற தேர்தல் 2026-ம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெறும் என்று நேற்று முடிவு செய்யப்பட்டுள்ளது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/46c3KEk

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *