
செப்டம்பர் 15, 2025 – வருமான வரிக் கணக்குத் தாக்கல் செய்ய நாளையே கடைசி நாள்.
வழக்கமான கடைசி நாளான ஜூலை 31-ஐ, தொழில்நுட்பக் காரணங்களுக்காக இந்த ஆண்டு செப்டம்பர் 15ஆம் தேதியாக நீட்டிக்கப்பட்டது.
அபராதம்
ஒருவேளை, நாளைக்குள் வருமான வரிக் கணக்குத் தாக்கல் செய்யவில்லை என்றால்…
பிரிவு 234A-ன் கீழ், கடைசி தேதிக்குப் பின், வருமான வரி தாக்கல் செய்தால், அதில் வருமான வரி நிலுவை இருந்தால், தாமதமாகும் ஒவ்வொரு மாதத்திற்கும் வருமான வரி நிலுவைக்கு 1 சதவிகிதம் வட்டி கட்ட வேண்டும்.
பிரிவு 234F-ன் கீழ், தாமதமாக வருமான வரி தாக்கல் செய்பவர்கள் ரூ.5 லட்சத்திற்கு மேல் வருமானம் இருப்பின் ரூ.5,000 அபராதம் கட்ட வேண்டும்.
ரூ.5 லட்சத்திற்கு கீழ் வருமானம் இருந்தால், ரூ.1,000 அபராதம் கட்ட வேண்டும்.
நீங்களே வருமான வரிக் கணக்குத் தாக்கல் செய்ய விரும்பினால், அதற்கான வழிகாட்டி இதோ.
ஆனால், சம்பளம் தாண்டி, முதலீடுகள், சொத்துகள் பல இருந்தால், ஆடிட்டர்கள் அல்லது வருமான வரி நிபுணர்களிடம் கொடுத்து தாக்கல் செய்வது நல்லது.
Business, Money, Invest, Personal Finance தொடர்பான Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://chat.whatsapp.com/IdbC2MFyIM6E5EHRomv2l4
வணக்கம்,
Personal Finance, மியூச்சுவல் ஃபண்ட், பங்குச்சந்தை, முதலீடு, சேமிப்பு போன்றவைகளில் பக்கா அப்டேட்டுகளும், ஆலோசனைகளும்.
கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்…