
திருப்பதி: திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாக அதிகாரி அனில் குமார் சிங்கால் நேற்று கண்காணிப்பு கட்டுப்பாட்டு அறையில் ஆய்வு செய்தார். அப்போது திருமலையில் காணாமல் போனவர்களை விரைவில் கண்டுபிடிக்க புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்துவது குறித்து அதிகாரிகளிடம் அவர் ஆலோசனை நடத்தினார்.
பின்னர் அவர் கூறும்போது, ‘‘திருமலைக்கு வரும் பக்தர்களை ‘பேஷியல் ரிகாக்னிஷன்' முறையில் அடையாளம் காணும் முறை அமல்படுத்தப்படும். இது தொடர்பாக எல் அன்ட் டி நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து கொள்ளப்படும்’’ என்றார்.