
சண்டிகர்: பஞ்சாபின் தர்ன் தரன் மாவட்டம், கதூர் சாஹிப் தொகுதி ஆம் ஆத்மி எம்எல்ஏ மஞ்சிந்தர் சிங் லால்புரா. கடந்த 2013-ல் 19 வயது தலித் பெண் ஒருவர் தனது குடும்பத்தினருடன் ஒரு திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றபோது தாக்கப்பட்டு, மானபங்கம் செய்யப்பட்டார்.
இது தொடர்பாக மஞ்சிந்தர் சிங் லால்புரா உள்ளிட்டோருக்கு எதிராக பஞ்சாபின் தர்ன் தரன் மாவட்ட நீதிமன்றத்தில் 12 ஆண்டுகளாக வழக்கு நடைபெற்று வந்தது. இவ்வழக்கில் எம்எல்ஏ மஞ்சிந்தர் சிங் உள்ளிட்ட 7 பேருக்கு 4 ஆண்டு சிறை தண்டனையும் 3 பேருக்கு ஓராண்டு சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது.