
அய்சால்: மிசோரமில் முதல் ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி நேற்று தொடங்கி வைத்தார். இது தவிர ரூ.9 ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அவர் அடிக்கல் நாட்டினார்.
பிரதமர் நரேந்திர மோடி வடகிழக்கு மாநிலங்களில் 2 நாள் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். இதன் ஒரு பகுதியாக மிசோரம் மாநிலம் அய்சால் நகரில் உள்ள விமான நிலையத்துக்கு நேற்று காலை சென்றடைந்தார். அங்கிருந்து லம்முவல் கிரவுண்டு பகுதிக்கு ஹெலிகாப்டரில் செல்ல திட்டமிட்டார். ஆனால் கனமழை காரணமாக அங்கு செல்லவில்லை.