
திருச்சி: பழைய ஓய்வூதியத் திட்டம் போன்ற வாக்குறுதிகள் என்னவாயிற்று, மக்களின் குரல் கேட்கிறதா முதல்வரே என்று திருச்சி பிரச்சாரத்தில் தவெக தலைவர் விஜய் ஆவேசத்துடன் கேள்வி எழுப்பினார்.
திருச்சியில் நேற்று தனது பிரச்சாரப் பயணத்தை தொடங்கிய விஜய், மரக்கடை எம்ஜிஆர் சிலை அருகே திரண்டிருந்த தொண்டர்கள், ரசிகர்கள் மத்தியில் பேசியதாவது: அந்தக் காலத்தில் போருக்கு போகும் முன்பு வெற்றிக்காக குலதெய்வ கோயிலுக்குச் செல்வார்கள். அதுபோல, தேர்தலுக்கு முன் மக்களை சந்திக்க வந்துள்ளேன்.