• September 14, 2025
  • NewsEditor
  • 0

சிவகங்கை: சிவகங்கை மாவட்​டம் திருப்​புவனம் வைகை ஆற்​றில் ஆக. 29-ம் தேதி காலை ‘உங்​களு​டன் ஸ்டா​லின்’ திட்ட முகாம் மனுக்​கள் மிதந்​தன. இதுகுறித்து சிவகங்கை கோட்​டாட்​சி​யர் விஜயகு​மார் விசா​ரணை நடத்​தி​னார். அதனடிப்​படை​யில், திருப்​புவனம் வட்​டாட்​சி​யர் விஜயகு​மார் இடமாற்​றம் செய்​யப்​பட்​டார். மேலும், அலட்​சி​ய​மாகப் பணிபுரிந்த 7 அலு​வலர்​கள் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்​கொள்​ளப்​பட்​டது.

முன்னதாக, திருப்​புவனம் வட்​டாட்​சி​யர் அலு​வல​கத்​தில் நில அளவைப் பிரி​வில் பராமரிக்​கப்​பட்டு வந்த 13 பட்டா மாறு​தல் தொடர்​பான மனுக்​களை மர்ம நபர்​கள் திருடிச் சென்​ற​தாக, வட்​டாட்​சி​யர் விஜயகு​மார் புகார் அளித்​திருந்தார். அதன்​பேரில், திருப்​புவனம் போலீ​ஸார் வழக்​குப்பதிந்​தனர். வட்​டாட்​சியர்அலு​வல​கத்​தில் சிசிடிவி கேம​ராக்​கள் இல்​லாத​தால், மனுக்​களை திருடிய நபரைக் கண்​டறிவ​தில் தாமதம் ஏற்​பட்​டது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *