
திருநெல்வேலி: “ஆளுங்கட்சிக்கு எதிரான மனநிலையில் உள்ள வாக்காளர்களது உணர்வின் வடிகாலாய் விஜய் இருக்கிறார். அதனாலேயே பெண்களும் இளைஞர்களும் கூட்டம் கூட்டமாக கூடுகிறார்கள். விஜய் மட்டுமே ஆட்சி அமைத்து விட முடியாது. நல்ல நண்பர்களை சேர்த்துக் கொண்டால் அவரது தேர்தல் வியூகம் சரியாக இருக்கும்” என்று புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தெரிவித்தார்.
திருநெல்வேலியில் இன்று செய்தியாளர்களிடம் அவர் கூறிய: “தமிழகத்தில் 1967-ம் ஆண்டுக்குப்பின் 2 கட்சிகள் மட்டுமே மாறி மாறி ஆட்சி செய்து வந்தன. இந்தக் கட்சிகளின் ஆட்சிக்கு எதிரான மனநிலையின் வெளிப்பாடுதான் விஜய் நிகழ்ச்சிகளுக்கு கூடும் கூட்டம். இது தமிழகத்தில் மாற்றத்தை விரும்பும் மக்களின் உணர்வுகளுக்கு வடிகாலாய் விஜய் இருப்பதை வெளிக்காட்டுகிறது. அதேநேரத்தில் விஜய்யின் செல்வாக்கு வாக்குகளா மாறுமா என்பது அவரது திறமையையும், கட்சியின் வியூகங்களையும் பொறுத்தது.