
மும்பை: ஆசிய கோப்பை தொடரில் இந்திய கிரிக்கெட் அணி, பாகிஸ்தான் உடன் விளையாடுகிறது என்ற அறிவிப்பு வெளியானது முதல் இந்த ஆட்டத்தில் இந்தியா விளையாடக் கூடாது என்ற குரல் ஒலித்து வருகிறது. அதற்கான காரணமாக பஹல்காம் தாக்குதல் அமைந்துள்ளது. இந்த சூழலில் இப்போட்டி குறித்து ஆர்பிஜி குழும தலைவர் ஹர்ஷ் கோயங்கா.
“இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான ஆட்டத்தை பார்க்க வேண்டாம் என மனம் சொல்கிறது. அது முக்கியம் அல்ல என புத்தி சொல்கிறது. ஆட்டத்தை புறக்கணிக்க வேண்டும் என தேசப்பற்று சொல்கிறது. அணியை உற்சாகப்படுத்த வேண்டும் என அறிவு சொல்கிறது. என மை-பாக்ஸ் கூட கலவையான சமிக்ஞைகளை கொடுத்துள்ளனர். இந்த பூமியில் நான் என்ன செய்ய?” என ஹர்ஷ் கோயங்கா ட்வீட் செய்துள்ளார்.